கட்சியில் முக்கிய பொறுப்பு: ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும்- சோனியா

மாறிவரும் அரசியல் சூழல்களை மனதில் கொண்டு பார்த்தால், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தவிர்க்க முடியாதது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறியிருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் கூடுதல் பங்களிப்பை ராகுல் காந்தி மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும்.
காங்கிரஸ் கட்சிக்கான ராகுல் காந்தியின் பங்களிப்பு நிச்சயம் தற்போதைய நிலைமையைவிட கூடுதலாகவே இருக்கும். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடியட்டும். செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இப்போது காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவிலிருந்து பிரணாப் முகர்ஜி வெளியேறிவிட்ட நிலையில், அந்த இடத்துக்கு ராகுல் காந்தி நியமிக்கப்படக் கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தியிடம், திக்விஜய் சிங்கின் கருத்துக் குறித்துக் கேட்டபோது, கட்சியில் கூடுதல் பங்களிப்பை செய்வதா இல்லையா என்பது குறித்து ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாரும் அந்த முடிவை எடுக்க முடியாது. ராகுலே அதை முடிவு செய்யட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications