ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே நாளில் 21 பாஸ்புக் கொடுத்த வங்கி
தூத்துக்குடி: சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே நாளில் 21 பாஸ்புக்குகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பத்திரப்பதிவு எழுத்தராக இருப்பவர் ஜெயசிங். அவர் சாத்தான்குளத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெயசிங் பணம் எடுப்பதற்கோ, செலுத்தவதற்கோ பாஸ்புக் கொண்டு செல்லவில்லை. இந்நிலையில் மேலாளர் மற்றும் ஊழியர்கள் புதிதாக இடம் மாறுதல் பெற்று வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கிக்கு சென்ற ஜெயசிங் வழக்கம்போல் பாஸ்புக் இல்லாமல் பணம் எடுப்பதற்கான ரசீதை அங்கிருந்த ஊழியரிடம் கொடுத்தார். அதற்கு அந்த ஊழியர் பாஸ்புக் இல்லாமல் பணம் எடுக்க முடியாது என கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து வங்கி மேலாளர் உங்களிடம் இருக்கும் பழைய பாஸ்புக்கை கொண்டு வாருங்கள் என்றார். அதன் பிறகு ஜெயசிங் தன்னிடம் இருந்த பாஸ்புக்கை எடுத்து வந்து கொடுத்தார். அதில் 2007ம் ஆண்டு வரை மட்டமே பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரின் தற்போதைய வரவு செலவு கணக்கை பதிவு செய்து புதிய பாஸ் புக் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அவரது கணக்குகள் 21 பாஸ்புக் வரை பதிவு செய்யப்பட்டது. பின்னர் அநத பாஸ்புக்குகள் ஜெயசிங்கிடம் வழங்கப்பட்டது. இத்தனை பாஸ்புக்குகளைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே நாளில் 21 பாஸ்புக்குகள் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களுக்கு வியப்பை அளித்தது.












Click it and Unblock the Notifications