ஐ.பி.எல். போட்டியில் ஆபாச நடனம்: கரினா, பிரியங்கா, அமிதாப் உள்ளிட்டோருக்கு மதுரை ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஜெபக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கடந்த 3.4.2012 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதனாத்தில் நடைபெற்றது. அப்போது கண்கவர் கலைநிகழ்ச்சிகள், நடனம், நாட்டியம் போன்றவை நடத்தப்பட்டன. இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்காசோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேத்திபெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிஞ்சர் ஆகியோர் அருவறுக்கத்தக்க வகையில் ஆபாசமாக நடனம் ஆடினர். இதன் மூலம் தமிழக கலாசாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் புகார் மீது தமிழக போலீஸ் டி.ஜி.பி. உரிய நடவடிக்கை எடுக்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஏ.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக போலீஸ் டி.ஜி.பி மற்றும் நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்காசோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேத்திபெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிஞ்சர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை வரும் 31-ந் தேதிக்கு நீதிபதி செல்வம் ஒத்திவைத்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications