காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன: பிரபுல் பட்டேல்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பிறகு சரத்பவாரின் இல்லத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பிரபுல் பட்டேல் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அரசியல் விவகாரங்களில் கருத்து மாறுபாடு இருந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் தமது பொறுப்பை உணர்ந்து செயல்படக் கூடிய கட்சி.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருக்கக் கூடிய ஒரு பிரிவினர் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் உறவை சீர்குலைப்பதில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பை தேசியவாத காங்கிரஸ் கோருவதாக செய்திகளைப் பரப்பி விடுகின்றனர். இதைத் தொடர்ந்துதான் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதன் பின்னர் மன்மோகன்சிங் நேற்று இரவு சரத்பவாரிடம் பேசினர். இன்று காலை சோனியா காந்தி அழைத்ததின் பேரில் சரத்பவாரும் நேரில் சென்று பேசினார். அதற்காக அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியானது ஒரு சிறிய கூட்டணிக் கட்சி என்பதால் நம்பர் 2 என்ற தகுதியை மறுப்பது சரியல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒரு அங்கம்தான் பவார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த கால அரசில் பிரணாப் முகர்ஜிக்கு அடுத்த நிலையில்தான் அமரவைக்கப்பட்டார் சரத்பவார்.
அதேபோல் இது அமைச்சரவை விவகாரம், நம்பர் 2 விவகாரம் மட்டுமல்ல.. 2014-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்தும் விவாதிக்கப்பட வேண்டியவை உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு இந்த விவகாரங்களை ஆராய்வோம் என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications