துணை ஜனாதிபதி தேர்தல்- ஜஸ்வந்த்சிங் வேட்புமனுத் தாக்கல் செய்தார்
Subscribe to Oneindia Tamil

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ந் தேதி முடிவடைகிறது. இதனால் ஆகஸ்ட் 7-ந் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைப்ற உள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மீண்டும் ஹமீத் அன்சாரியே போட்டியிடுகிறார். அவர் ஏற்க்னவே மனுத்தாக்கல் செய்துவிட்டார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஹமீத் அன்சாரியை எதிர்த்து ஜஸ்வந்த்சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, யஸ்வந்த் ஷின்கா, சுஸ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மற்றும் சரத் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications