எங்கு பார்த்தாலும் சுகாதார சீர்கேடு... சென்னையில் காலரா பீதி
சென்னை: சென்னையில் வயிற்றுப் போக்கு அதிகரித்து வருகிறது. இதுவரை 36 பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் நேற்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து சென்னையில் காலரா பரவி வருவதாக மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
தலைநகரில் எங்கு பார்த்தாலும் தேங்கிக் கிடக்கும் குப்பையும், சுகாதார சீர்கேடுமே காலரா பரவக் காரணம் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையில் தற்போது பலர் வயிற்றுப் போக்குப் பிரச்சினையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர் தண்டையார்ப்பேட்டை அரசு தொற்றுநோய் மருத்துவமனைக்கு வயிற்றுக்கோளாறு காரணமாக படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுவரை 36 பேர் வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 6 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று 60 வயதான குளம்மாள் என்பவர் வாந்தி, பேதி காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சென்னையில் பரவுவது காலரா என்று மக்களிடையே கருத்து எழுந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியிலும் வாந்தி பேதி காரணமாக பலரும் சிகிச்சை பெற வருகின்றனர்.
சென்னை நகரில் ஆரோக்கிய சீர்கேடு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல வார்டுகளிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக இவை பெரும் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் பன்றிகளின் பெருக்கமும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.
மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து அக்கறை காட்டுவதில்லை என்றும் கவுன்சிலர்கள் சரிவர தங்களது பணிகளைக் கவனிப்பதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருவோருக்கு காலரா பாதிப்பே இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்களும் தெரிவிக்கின்றன. இது கவலை அளிப்பதாக உள்ளது. காலரா மேலும் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகளும், மாநில சுகாதாரத் துறையும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications