ஜாதகத்தில் ஜென்ம சனி: குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் பரிகார பூஜை
தேனி: தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பரிகார பூஜை செய்தார்.
தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஜாதகத்தில் ஜென்ம சனி நடப்பதாக அவரது குடும்ப ஜோதிடர் கூறியுள்ளார். மேலும், சனி பகவானின் உக்கிரப் பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் திருநள்ளாறுக்கு அடுத்தப்படியாக புகழ் பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து எம்.சி.சம்பத் திடீரென குச்சனூர் சனீஸ்வரன் கோவிலுக்கு வந்தார். அங்கு முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அடுத்து தனது ராசியான துலாம் ராசிக்கும், விசாக நட்சத்திரத்திற்கும், தற்போது ஜென்ம சனி நடப்பதால் அதற்காகப் பரிகாரமும், சிறப்புப் பூஜையும் செய்தார்.
ஜென்ம சனி உள்ளவர்கள் குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் வழிபட்டு பரிகார பூஜை செய்தால் அதன் தாக்கம் குறையும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications