பெட்ரோல் விலை உயர்வு: மமதா ஆவேசம்-பிரதமருடன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Mamata Banerje
கொல்கத்தா: பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி விலை உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை சரிவு ஆகிய காரணங்களைக் காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 70 பைசா உயர்த்தியுள்ளன. இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆலோசனை நடத்தாமலேயே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

செய்தித்தாள்களைப் பார்த்து தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டோம். இதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். கூட்டணி கட்சிகளுக்கு கூட சொல்லாமல் விலையை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. இதை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் போராடும். இது குறித்து நான் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசவிருக்கிறேன்.

பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என்றார்.

ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது அதற்கு கண்டனம் தெரிவித்த மமதா விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்று எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+