மஹாராஷ்டிரா காங்கிரஸில் உட்கட்சி மோதல் உச்சம்- பிரித்விராஜ் சவானுக்கு எதிராக 60 எம்.எல்.ஏக்கள்

தேசியவாத காங்கிரஸின் குமுறுலை எப்படியாவது குறைத்து சமாதானப்படுத்திவிடலாம் என்று காங்கிரஸ் மேலிடம் போராடிக் கொண்டிருக்கிறது. அப்படி தேசியவாத காங்கிரஸ் சமாதானம் அடைந்தாலும் மஹாராஷ்டிராவில் முதல்வர் பிரித்விராஜ் சவானுக்கான சொந்தக் கட்சியின் குடைச்சல் ஓயாதுபோல் இருக்கிறது.
விதர்பா பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் மேலிடத்துக்கும் மாநில தலைவர் மாணிக்ராவ் தாக்கரேக்கும் பிரித்விராஜ் சவானின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். கட்சியின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் சவான் செயல்படுவதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சோனியா கட்டளையை ஏற்று டெல்லி செல்ல இருந்த சவானின் பயணம் திடீரென ஒத்தியும் வைக்கப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து தேசியவாத காங்கிரசை சமாதானப்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சி, தேவைப்பட்டால் சவானை மாற்றிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.
அப்படி சவான் நீக்கப்பட்டால் சரத்பவாரின் உறவினரான அஜித் பவாருக்குத்தான் முதல்வர் பதவி கிடைக்குமாம்!












Click it and Unblock the Notifications