தேசியவாத காங்கிரஸுடன் மோதல்- மஹாராஷ்டிரா முதல்வர் சவானை டெல்லி வருமாறு சோனியா அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் குடைச்சல். கொடுத்து வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்தும்விதமாக மஹாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானை டெல்லி வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்டளையிட்டுள்ளார்.

பிரணாப் முகர்ஜி வகித்து வந்த 2-வது இடத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்பார்த்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. அவை முன்னவர் பதவியும் பவாருக்கு கிடைக்காதுபோல் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக இரண்டு கட்சித் தலைவர்களும் கூடிகூடிப் பேசிவருகின்றனனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையேயான மோதலுக்கு மஹராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான்தான் காரணம் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதனால் சவானை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா உத்தரவிட்டிருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சவான் முன்னிலையில் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தையை சோனியா நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த பஞ்சாயத்து இன்றைக்காவது முடிவுக்கு வருமா என்று எதிர்பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+