For Daily Alerts
Just In
மறுவாழ்வு தருவதாக ஏமாற்றி 8 ஊனமுற்ற, விதவைகளை மணந்து மோசடி செய்த என்ஜினியர்
சென்னை: ஊனமுற்ற மற்றும் விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாகக் கூறி 8 பேரை திருமணம் செய்து மோடி செய்த என்ஜினியர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவன் ரத்தீஷ். என்ஜினியரிங் படித்துள்ள இவன் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலைபார்ப்பதாகவும் விதவைகள் மற்றும் ஊனமுற்ற பெண்களை திருமணம் செய்ய விரும்புவதாகவும் இணையதளத்தில் விளம்பரப்படுத்தினான்.
இந்த விளம்பரத்தைப் பார்த்து இவனை தொடர்பு கொண்ட பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு நகைகளையும் பறித்துக் கொண்டு ஏமாற்றியிருக்கிறான்.
ஏமாற்றமடைந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வரதட்சணை ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி ரத்தீஷை கைது செய்துள்ளனர். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments
English summary
The enginer was arrested on charges of fraud marriage by the chennai police.
Story first published: Thursday, July 26, 2012, 11:11 [IST]