லண்டன் ஒலிம்பிக்: இன்று தகுதி சுற்றில் பங்கேற்கிறது இந்திய வில்வித்தை அணி

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா இன்று இரவு பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பே கால்பந்து போட்டிகள் துவங்கிவிட்டன. இந்த நிலையில் இன்று வில்வித்தையின் முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.
பழம் பெருமை வாய்ந்த கிரிக்கெட் மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் வில்வித்தை போட்டிகள் நடைபெற உள்ளது. வில்வித்தை போட்டியின் ஆண்கள் பிரிவில் மொத்தம் 64 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஜெயந்தா தலுத்கர், தருண்தீப்ராய், ராகுல் பானர்ஜி ஆகிய 3 பேர் இந்தியர்கள். இன்று நடைபெற உள்ள முதல் சுற்றில் வெற்றி பெறும் 32 வீரர்கள் அடுத்த சுற்றிற்குள் நுழைவார்கள்.
அடுத்த சுற்றில் வெற்றி பெறும் 16 பேர் 3வது சுற்றிற்கு தகுதி பெறுவார்கள். 3வது சுற்றில் வெற்றி பெறும் 8 பேர் 4வது சுற்றிற்கு நுழைவார்கள். அதன்பிறகு காலிறுதி போட்டி நடைபெறும்.
பெண்கள் வில்வித்தை போட்டிகளில் இந்தியாவை தீபிகா குமாரி, பாம்பைல்யா தேவி, செய்க்ரோஸ்வாலு ஆகியோர் போட்டியிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications