என்ஜினியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக ஒன்றிய செயலாளர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு
நெல்லை: நெல்லை அருகே மனைவி பெயருக்கு டென்டர் ஒதுக்கக் கோரி என்ஜினியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நான்குநேரி ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.எஸ். முருகன் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அவர் தலைமறைவாகிவிட்டார்.
நெல்லை தாமிரபரணி வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் சந்திரசேகரன். அவர் நெல்லை மாநகரப் போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 18ம் தேதி நான் அலுவலகத்தில் இருந்தபோது அதிமுக பிரமுகர் ஆர்.எஸ்.முருகன் என்பவர் உள்பட சிலர் எனது அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது ஆர்.எஸ்.முருகன், தாமிரபரணி வடிகால் மற்றும் கண்மாய் பராமரிப்பு பணிக்கான டென்டரை தனது மனைவி சிந்துவுக்கு தான் கொடுக்க வேண்டும் என்றும், மற்ற யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டி என்னை சுட வந்தார். அப்போது மேஜையின் கீழ் பதுங்கிக் கொண்டதால் நான் உயிர் தப்பினேன்.
எனவே, ஆர்.எஸ்.முருகன் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கமிஷனர் கருணாசாகர் உத்தரவின்பேரில் பாளை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இந்த மனு குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், நெல்லை தாமிரபரணி வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் சந்திரசேகரனை அதிமுக பிரமுகர் ஆர்.எஸ்.முருகன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து ஆர்.எஸ்.முருகன் மற்றும் அவருடன் வந்த சிலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தகவல் அறிந்த ஆர்.எஸ்.முருகன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications