உ.பி.யில் பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜாலிபூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் ஜாலிபூரில் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் உயிரோடு புதையுண்டனர்.
ஜாலிபூர் கிராமத்தில் உள்ள மன்ஷா தேவி ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளிக் கூடத்தின் மேற்கூரை சரிந்தது. பல மாணவர்கள் வெளியேறிவிட்ட நிலையில் 13 பேர் மட்டும் மேற்கூரை விழுந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 7 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications