நாங்குநேரி அருகே வாலிபரை சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் உயிருக்கு பயந்து ஜீப்பில் வலம்?
நெல்லை: நாங்குநேரி அருகே வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் விஜயகுமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை ஜீப்பில் வைத்து கொண்டு போலீசார் வலம் வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் மணல் அள்ளும் பிரச்சனை தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பகுதியைச் சேர்ந்த வானுமாமலை என்ற இளைஞர் குண்டு பாய்ந்து இறந்தார். மாமூல் வசூலிப்பது தொடர்பாக இந்த படுகொலை அரங்கேறியிருப்பதாக பல தரப்பினரும், அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டினர். மனித உரிமைக்கு எதிராக நடந்த இந்த சம்பவத்தில் நீதி விசாரணை கோரி அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் போலீசாரால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மக்களிடையே துப்பாக்கிச்சூடு தொடர்பான பதற்றமும் தணியவில்லை. போலீசார் மீது ஆத்திரம் குறையாமல் இருப்பது பொது மக்களின் பேச்சிலேயே தெரிகிறது. அப்பகுதியில் இரவு நேரங்களில் இளைஞர்களின் நடமாட்டமும் உள்ளது. நாங்குநேரி போலீசாருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தொடர்ந்து அங்குள்ள காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் மூன்றடைப்பு காவல் நிலையம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே வானுமாமலையை சுட்டுக்கொன்ற விஜயகுமாரின் குடும்பத்தார் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுவி்ட்டனர். இன்ஸ்பெக்டர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் அவரை ஒரே இடத்தில் வைக்காமல் ஜீப்பில் வைத்து கொண்டு போலீசார் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications