முதியோருக்கு இனி திருப்பதியில் ஸ்பெஷல் தரிசனம்
Subscribe to Oneindia Tamil

ஏழுமலை மீது அமர்ந்திருக்கும் வெங்கடேஸ்வரப்பெருமாளைக் காணவரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கூட்டம் அதிகமாவதால் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சாமி தரிசனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அவர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய நடைமுறை ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications