நெல்லூருக்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது-உறவினர்கள் செல்கிறார்கள்

இந்த ரயிலில் உறவினர்கள் அனைவரும் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர ரயில்வே அதிகாரிகள், செய்தியாளர்களும் சென்றுள்ளனர். மேலும் மருந்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று அதிகாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 11 கோச்சில் மின் கசிவால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25 பயணிகள் கருகினர். இதில் தீக்காயங்களுடன் உயர் தப்பியோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இறந்தவர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை.
இதையடுத்து தீ விபத்தில் சிக்கியோரின் உறவினர்கள் மற்றும் ரயில்வே பணியாளர்களுடன் காலை 10.30 மணியளவில் சிறப்பு ரயில் நெல்லூர் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் உறவினர்கள் இலவசமாக நெல்லூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை சென்ட்ரலில் 9 சிறப்பு தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்குள்ளான ரயில் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications