ராட்சத பலம் கொண்ட அதிமுக, திமுகவுக்கு மாற்று கட்சி மதிமுக மட்டுமே: வைகோ

திருச்சி மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,
திராவிட இயக்கத்தின் கொள்கையையும், தனி ஈழ கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்தும் ஒரே கட்சி மதிமுக மட்டுமே. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை சிகிச்சை பெறுவதற்காகக் கூட தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்காதவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவர் தற்போது டெசோ மாநாடு நடத்தப்போவதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை.
கூட்டணிக்காக, சொற்ப இடங்களைப் பெறுவதற்காக காத்துக் கிடக்கும் கட்சி மதிமுக அன்று. தேர்தலில் போட்டியிடாமல் இருந்த காலத்திலும் கூட தமிழகத்தின் இயற்கை வாழ்வாதாரங்களை காக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினோம்.
அதிமுக, திமுக ஆகிய ராட்சத பலம் வாய்ந்த கட்சிகளுக்கு இடையே புதிய மாற்றத்தை மதிமுகவால் மட்டுமே ஏற்படுத்த முடியும். அதற்கான புரட்சி மக்களிடையே கரு கொண்டுள்ளது. மக்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பஞ்சாயத்து அளவில் மதிமுக செயலாளர்கள் நியமிக்கப்ப்டடு வருகிறார்கள். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் தங்களின் செல்போன் எண்களை எனக்கு அளிக்க வேண்டும்.
ஊடகங்களில் மக்கள் பிரச்சனைகள் வெளிவருகையில் அவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க, அவர்களுக்கு வழிகாட்ட செல்போன் எண்கள் உதவியாக இருக்கும். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கரூரில் நடக்கும் மதிமுக மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications