பெ.தி.க. பிரமுகர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த தளி எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் சரண்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளராக இருந்த பழனிச்சாமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உட்பட 4 பேர் இன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் பழனிச்சாமி கடந்த 5-ந் தேதி காலையில் தமது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று அவரை துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. அத்துடன் அவரது தலையையும் துண்டித்து வீசியது. இக்கோர கொலையில் தளி எம்.எல்.ஏ.ராமச்சந்திரன், அவரது சகோதரர், மாமனார் ஆகியோருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் தளி எம்.எல்.ஏ.ராமச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கடந்த சில வாரங்களாக் தலைமறைவாக இருந்து வந்தனர். மேலும் ராமச்சந்திரன் தமக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனால் இன்று முற்பகல் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மற்றும் 4 பேர் சரணடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+