ராஜீவ் கொலை குற்றவாளிகளின் மனுக்களை நிராகரிக்க வலியுறுத்துவோம்-இளங்கோவன்
ஈரோடு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளின் கருணை மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேரையும் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மேலும் 3 பேரின் சார்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. இந்த கருணை மனுவை ஏற்று கொள்ள வேண்டும் என்று ஒரு குழுவினரும், அந்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஒரு குழுவினரும் தமிழகத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த போவதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்த உள்ளோம்.
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 15ம் தேதி திருப்பூரை அடுத்த குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை மத்திய அமைச்சர் வாசன் திறந்து வைக்க உள்ளார் என்றார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications