கொல்லம் ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர்

Subscribe to Oneindia Tamil

Matha Amirthanandamayi
கொல்லம்: கொல்லம் ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெண் சாமியாரான மாதா அமிர்தானந்தமயியின் ஆசிரமம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் வள்ளிகோவிலில் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு தினமும் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். பக்தர்களுக்கு அமிர்தானந்தமயி முத்தம் கொடுத்து ஆசிர்வாதம் வழங்குவார்.

வழக்கம் போல் நேற்றும் தன்னை சந்திக்க வந்த பக்தர்களுக்கு அவர் ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அமிர்தானந்தமயியை தாக்க முயன்றார். உடனே அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் பீகாரைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+