பிஎம்டபுள்யூ கார் விபத்து: உரிமையாளர் 2 ஆண்டு சமூக சேவை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முன்னாள் கடற்படை தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தா. அவர் கடந்த 1999ம் ஆண்டு டெல்லியில் தனது பி.எம்.டபுள்யூ காரில் வேகமாகச் சென்று 3 போலீசார் உள்பட 6 பேரைக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அவரது மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனையை 2 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி போலீசார் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அளித்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் சஞ்சீவ் நந்தா ரூ.50 லட்சம் ரொக்கத்தை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என்றும், அந்த பணம் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறியது. மேலும் அவர் 2 ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் எந்த வகையான சேவை செய்ய வேண்டும் என்பதை சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த அமைச்சகம் சொல்லும்படி கேட்காவிட்டால் அவர் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
சஞ்சீவ் நந்தா ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர் இனியும் சிறையில் இருக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications