ஒலிம்பிக் அணிவகுப்பில் நான் வந்திருக்க கூடாது-இந்திய அணியுடன் வந்த மதுரா வருத்தம்

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் ஒவ்வொரு நாட்டு அணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய அணியின் அணிவகுப்பின் போது, இந்திய வீராங்கனைகள் மஞ்சள் நிற சேலை அணிந்து வந்தனர். ஆனால் அணிவகுப்பில் தேசிய கொடி ஏந்தி சென்ற இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கு அருகில், ஒரு பெண் மட்டும் சிவப்பு நிற சர்ட், நீல நிற பேண்ட் அணிந்து வந்தார்.
வீராங்கனைகளுக்கு இடையே அணிவகுப்பில் கலந்து கொண்ட அந்த பெண் குறித்து இந்திய ஒலிம்பிக் அணியை வழிநடத்தி சென்ற முரளிதரன், ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் அளித்தார்.
விசாரணையில் அவர் பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் முதுநிலை பட்டம் படிக்கும் மாணவி என்பதும், அவர் ஒலிம்பிக் துவக்க விழாவில் நடனமாட தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் துவக்க விழாவில் அணிவகுப்பில் தான் கலந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பத்திற்கு மதுரா நாகேந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனது நடவடிக்கையினால் பலருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எனது நடவடிக்கையினால் இவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனது தவறை நான் ஊடகங்களுக்கு மறைக்க விரும்பவில்லை. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க எனது வாழ்த்துக்கள் என்றார்.












Click it and Unblock the Notifications