Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. அனாதை விடுதிகளில் விதவைகள் உடல்களை துண்டு துண்டாக வெட்டும் வழக்கம்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அனாதை விதவைகள் இறந்துவிட்டால் அவர்களது உடல்களை வெட்டி துண்டு துண்டாக பைகளில் கட்டி அடக்கம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச அனாதை விதவைகள் தங்கியுள்ள விடுதிகளில் நடைபெறும் இது போன்ற கொடூரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய சட்டமைய அமைப்பின் சார்பில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் மனுவில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் முறைப்படி இறுதி சடங்கு செய்வதில்லை. அதற்கு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் இறந்த விதவைகளின் உடல் களை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பைகளில் போட்டு அப்புறப்படுத்தும் நிலை உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

விதவைகள் இறந்ததும் உடல்களை உரிய மரியாதையுடன் அவர்கள் சார்ந்த மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்ய வேண்டும். அனாதை விடுதிகளில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மதுரா மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி, அனாதை விடுதிகளில் இறக்கும் விதவைகளின் உடல்களை உரிய மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+