உ.பி. அனாதை விடுதிகளில் விதவைகள் உடல்களை துண்டு துண்டாக வெட்டும் வழக்கம்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அனாதை விதவைகள் இறந்துவிட்டால் அவர்களது உடல்களை வெட்டி துண்டு துண்டாக பைகளில் கட்டி அடக்கம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச அனாதை விதவைகள் தங்கியுள்ள விடுதிகளில் நடைபெறும் இது போன்ற கொடூரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய சட்டமைய அமைப்பின் சார்பில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மனுவில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் முறைப்படி இறுதி சடங்கு செய்வதில்லை. அதற்கு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் இறந்த விதவைகளின் உடல் களை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பைகளில் போட்டு அப்புறப்படுத்தும் நிலை உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
விதவைகள் இறந்ததும் உடல்களை உரிய மரியாதையுடன் அவர்கள் சார்ந்த மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்ய வேண்டும். அனாதை விடுதிகளில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மதுரா மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி, அனாதை விடுதிகளில் இறக்கும் விதவைகளின் உடல்களை உரிய மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications