கல்வி உதவித் தொகையில் மோசடி: ஒரே நாளில் 73 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடைநீக்கம்
நாமக்கல்: தமிழக கல்வித்துறை வரலாற்றில் ஒரே நாளில் 73 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கியதில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2010-11, 2011-12 கல்வி ஆண்டுகளில் 99 பள்ளிகளுக்கு ரூ81 லட்சம் நிதி காசோலையாக வழங்கப்பட்டது. இந்தக் காசோலை வழங்குவதில் பல லட்சக்கணக்கான மோசடி நிகழ்ந்துள்ளதாக கல்வித்துறைக்கு புகார் சென்றது.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மோசடி உண்மை எனத் தெரியவந்தது. அதாவது 36 விழுக்காடு விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியான குழந்தைகளுக்கு உரியது. மற்ற 64 விழுக்காடு குழந்தைகளின் பட்டியல் போலியாக தயாரிக்கப்பட்டு ரூ69 லட்சம் அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் பலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனிடையே மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 பேர் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் குழுவும் நேரடியாக வந்து விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 73 தலைமை ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேர் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications