சுதந்திர தினத்தன்று டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பீகார் நபர் சதி: இமெயிலால் பரபரப்பு

மாகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த 1ம் தேதி இரவு அடுத்தடுத்து 4 இடங்களில் குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் காயம் அடைந்தார். உயிரிழப்பு எதுவுமில்லை. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் சி.கே. மேத்யூ உள்பட பல்வேறு மாநில தலைமை செயலாளர்களுக்கு அஜய் கஷ்யப் என்பவர் நேற்று ஒரு இமெயில் அனுப்பியுள்ளார்.
அந்த இமெயிலில் அவர் கூறியிருப்பதாவது,
வரும் 15ம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த இமெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளவர் குறித்த தகவல்களை தெரிவி்ததுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. இமெயிலை அனுப்பியவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இமெயில் கிடைத்ததையடுத்து மாநில மற்றும் மத்திய உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications