For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்துக்கு தீவிரவாதிகள் குறி: சுதந்திர தினம் வரை உச்சகட்ட பாதுகாப்பு

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்:புனே குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் இருப்பதால் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-ந் தேதி வரை மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் உச்சகட்ட உஷார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் முக்கியமான இடங்கள் அதாவது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ள இடங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்துக்குள் நுழையக் கூடிய, வெளியேறக் கூடிய அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. குஜராத் மாநில தலைநகராக அகமதாபாத்தில் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Gujarat has been put on high alert in the wake of Intelligence Bureau's warning of a possible terror strike in the state, after the Pune blasts, a top police official said in Ahmedabad on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X