துணை ஜனாதிபதி தேர்தல் துவங்கியது: மாலையே முடிவு அறிவிப்பு

துணை ஜனாதிபதி தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலைப் போன்றில்லாமல் இத்தேர்தலில் ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது.
இந்த தேர்தலை பிஜு ஜனதாதளம் புறக்கணித்துள்ளது. முதலில் முரண்டு பிடித்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி இறுதியில் அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஹமீது அன்சாரிக்கே அதிக ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications