டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: 114 மையங்களில் தேர்வு
சென்னை: வரும் 12ம் தேதி நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்வதற்கான குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 13ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் துணை பதிவாளர் (52), நகராட்சி ஆணையர் (14), உதவிப் பிரிவு அலுவலர் (12), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (3), முதுநிலை ஆய்வாளர் (181), கண்காணிப்பாளர்/ இளநிலை கண்காணிப்பாளர் (162), இளநிலை கூட்டுறவு தணிக்கையர் (229), வருவாய் உதவியாளர் (380) உள்ளிட்ட பதவிகளுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வு எழுத மொத்தம் 6 லட்சத்து 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 12ம் தேதி மொத்தம் 114 மையங்களில் 3,456 தேர்வு கூடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தகவல் பெறலாம்.