நடராஜனிடம் விளக்கம் கேட்காமல் பாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை ரத்து செய்தது சென்னை ஹைகோர்ட்

தமது பாஸ்போர்ட்டை முடக்கியதை எதிர்த்து எம் .நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவில், வெளிநாட்டில் இருந்து காரை வாங்கிய வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்நிலையில் தம்முடைய விளக்கத்தைக் கோராமலேயே தமது பாஸ்போர்ட்டை முடக்கி மண்டல அதிகாரி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் மண்டல அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடராஜன் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, நடராஜனிடம் உரிய விளக்கம் கேட்காமல் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரிடம் விளக்கம் பெற்று, அதன்பின்னர் தகுந்த உத்தரவை பாஸ்போர்ட் மண்டல அதிகாரி பிறப்பிக்கலாம். ஒருவேளை அந்த உத்தரவு மனுதாரருக்கு எதிராக இருந்தால், பாஸ்போர்ட் சட்டத்தின்படி, உயர் அதிகாரியிடம் நடராஜன் மேல்முறையீடு செய்யலாம் என்றார்.












Click it and Unblock the Notifications