For Daily Alerts
Just In
அத்வானி பெரியவர், அவர் பேச்சுக்கு நான் யார் கருத்து சொல்ல... ராகுல் நக்கல்
இன்று நாடாளுமன்றத்தில் அத்வானியின் பேச்சால் பெரும் சர்ச்சை கிளம்பி விட்டது. வழக்கமாக அமைதியாக இருக்கும் சோனியா காந்தியே இன்று புயல் போல சீறிப் பாய்ந்து விட்டார்.
காங்கிரஸ் கூட்டணி அரசை கள்ளத்தனமான அரசு என்று அதவானி கூறியதுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து ராகுல் காந்தியிடம் கருத்துக் கேட்கப்பட்டது. ஆனால் அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார். ஆனால் அத்வானியை மறைமுகமாக அவர் வாரி விட்டார்.
அவர் கூறுகையில், அத்வானி மூத்த தலைவர். தான் என்ன சொன்னோம் என்பது அவருக்குத் தெரியும். நான் கருத்துச் சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டார் ராகுல். இதிலிருந்தே ஒரு பெரிய மனிதர், பெரிய தலைவர் பேசும் பேச்சா இது என்று மறைமுகமாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Comments
English summary
In Parliament, a visibly angry Sonia Gandhi gestured to senior Congress ministers, asking them to take on LK Advani after the opposition leader made a controversial remark that questioned the legitimacy of the Congress-led government. Gandhi's son, Rahul, however, who was also in Parliament, was circumspect. "He is a senior person. He knows what he is saying. I do not want to comment," he said.