அத்வானியின் ஆருடத்தால் ஐக்கிய ஜனதா தளத்தில் கருத்து வேறுபாடு

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமது வலைப்பூவில் (ப்ளாக்) எழுதியிருந்த அத்வானி, காங்கிரஸ் அல்லது பாஜகவின் பிரதமர்கள்தான் முழுமையான ஆட்சியைத் தர முடியும் என்றும் பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் பிரதமர்களால் முழுமையான ஆட்சியைத் தர இயலாது என்றும் கூறியிருந்தார். மேலும் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியின் சார்பில் ஒருவர்தான் பிரதமராக முடியும் என்றும் அத்வானி கூறியிருந்தார்.
அத்வானியின் இந்தக் கருத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் நிராகரித்திருந்தார். ஆனால் அதே கட்சியின் சிவானந்த் திவாரி எம்.பியோ, அத்வானி மிகவும் மூத்த தலைவர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளை எடைபோட்டுப் பார்த்து கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்துகள் யதார்த்தத்தையே பிரதிபலிக்கின்றன என்றார் அவர்.
அத்வானி சொன்ன ஆரூடம் இன்னும் எத்தனை கட்சிகளில் கலகத்தை உருவாக்கப் போகிறதோ?












Click it and Unblock the Notifications