ஈரான் செல்கிறார் மன்மோகன் சிங்!

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: அணி சேரா நாடுகள் இயக்க (Non Aligned Movement- NAM) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வரும் 29ம் தேதி ஈரான் செல்கிறார்.

ஈரானின் அணுத் திட்டங்களைக் காரணமாகக் காட்டி அந்த நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளையும், கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்ததையும் அறிவித்து அந்த நாட்டை தனிமைப்படுத்த முயன்று வரும் நிலையில் இந்த அணி சேரா நாடுகள் மாநாடு ஈரானில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஈரான் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால்,

ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதாரத் தடையை மட்டும்தான் கடைப்பிடிப்போம் என்று இந்தியா கூறி வருகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என பல நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தனிப்பட்ட முறையில், மறைமுகமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவுள்ளார்.

அதே போல பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியும் இதில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டின்போது ஜர்தாரி உள்ளிட்ட தலைவர்களுடன் மன்மோகன் சிங் பேச்சு நடத்தவுள்ளார்.

ஈரானில் நடக்கவுள்ள அணி சேரா நாடுகள் இயக்கத்தின் 16-வது மாநாடாகும். இந்த இயக்கத்தில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

கடந்த மே மாதம் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டையொட்டி ஈரானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மன்மோகன் சிங், அகமதி நிஜாத்தை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 12 சதவீதத்தை ஈரானிலிருந்துதான் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+