நெல்லையில் வறட்சி: மழை வேண்டி மாற்றுத் திறனாளி குழந்தைகள் மனமுருகி பிரார்த்தனை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வரும் நிலையில் மழை வேண்டி மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 1 மணி நேரம் பிரார்த்தனை செய்தனர்.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கிடைக்கும் மழை நீர் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் சேமிக்கப்படுகிறது. பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக ஜூ்ன் 1ம் தேதி பெய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு துளி கூட பெய்யவில்லை. கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டதால் கார் பருவத்தில் பசுமையாக காட்சியளிக்க வேண்டிய வயல்கள் அனைத்தும் தரிசாகக் உள்ளன.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதமே பெய்யும். எனவே இடைப்பட்ட இரண்டு மாத காலத்துக்கு குடிநீர் தேவையைக் கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் அணைகள், குளங்கள் அனைத்தும் வறண்டு போயுள்ளன. மாவட்டத்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு காட்சியளிப்பதால் கால்நடைகள் கூட தண்ணீரின்றி தவிக்கின்றன. இந்நிலையில் மழை பெய்ய வேண்டி இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 1 மணி நேரம் பிரார்த்தனை செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+