அகமதாபாத்தில் இருந்து விமானத்தைக் கடத்த லஷ்கர் இ தொய்பா சதித் திட்டம்
டெல்லி: வரும் 15ம் தேதிக்குள் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானத்தை கடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மாநில அரசுகளை உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் வரும் 15ம் தேதிக்குள் அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானத்தை கடத்திச் செல்ல லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications