அகமதாபாத்தில் இருந்து விமானத்தைக் கடத்த லஷ்கர் இ தொய்பா சதித் திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் 15ம் தேதிக்குள் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானத்தை கடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மாநில அரசுகளை உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் வரும் 15ம் தேதிக்குள் அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானத்தை கடத்திச் செல்ல லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+