ஈரானில் தொடர் நிலநடுக்கங்கள்: 250 பேர் பலி- 2000 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தப்ரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமட்டைந்துள்ளனர். 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஈரானின் வடகிழக்குப் பகுதியான தப்ரிஸ் நகரை சுற்றிய பல கிராமங்கள் நிலநடுக்கங்களில் புதையுண்டு போயுள்ளன. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 6.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளோரையும் புதையுண்டு போயுள்ள கிராமங்களை தோண்டி எடுப்பதிலும் மீட்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

தப்ரிஸ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இதுவரை 55 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் ஈரானில் 25 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+