குழந்தைகளை கடத்தி, செயின்களில் கட்டிப் போட்டு தீவிரவாத பயிற்சி அளிக்கும் அல்-கொய்தா

சோமாலியாவில் இந்தக் கொடுமை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட தீவிரவாத பயிற்சிப் பள்ளிகள் போலவே இவை இயங்குவதாக புகார் கூறப்படுகிறது.
சோமாலிய தலைநகர் மொகாதிசுவில் தனி அறைகளில் வரிசையாக படுக்கைகள் போடப்பட்டு அதில் இந்த சிறுவர்கள், பலர் 7 வயதுக்கும் குறைவானவர்கள், கட்டிப் போடப்பட்டுள்ளனர்.
மேற்கு நாடுகளில் எதிர்காலத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பயிற்சிகளை அல்-கொய்தாவின் சோமாலிய துணை அமைப்பான அல் ஷபாப் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமல் டிமிக்கி அடிப்பதைத் தடுக்கவே, இவ்வாறு கட்டிப் போடப்பட்டுள்ளதாக அந்தப் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இதை யாரும் நம்பவில்லை.
சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்தப் பயிற்சிகளை அளித்த சுமார் 200 பேரை சோமாலிய அரசும் அந்த நாட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஆப்பிரிக்க யூனியன் படைகளும் கைது செய்துள்ளன.












Click it and Unblock the Notifications