கொழும்பில் இந்திய நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை சீனாவிடம் தூக்கிக் கொடுத்த இலங்கை!

கொழும்பு காலி வீதியில் உள்ள டுப்ளிகேஷன் வீதியில் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்திருந்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும் இலங்கை வெளிவிவகார அமைச்சகத்துக்கு உரிய நடைமுறைகளின்படி கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் திடீரென சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுனவத்துக்கு இந்த நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டது. இதில் இந்தியா கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள கொழும்பு தூதரிடம் இந்திய வெளிவிவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. கொழும்பிலும் இந்திய தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய இந்த நிலத்தை வாங்குவதற்கு அமெரிக்க தூதரகமும் கூட முன்பு முனைப்பு காட்டியிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா அம்முடிவை கைவிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications