ஊடகம் அறிவியல் கல்லூரியில் 'இந்தியனிஸம் 2012' - சைதை துரைசாமி பங்கேற்பு
சென்னை: இந்தியாவில் 65 ஆண்டு கால சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் ஊடகக்கலை மற்றும் அறிவியல் கல்லூரி (MASC) 'இண்டியனிசம் 2012' என்கிற விழாவை எற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை சென்னை மேயர் சைதை துரைசாமி பங்கேற்று பார்வையிட்டார்.
இவ்விழாவை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி, முப்பரிமாண மாதிரிகள் காட்சி, களிமண் மாதிரிகள், காட்சி வரைப்படங்கள், விளையாட்டு வடிவங்கள் அனிமேஷன் காட்சி, புகைப்படக் காட்சி என பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
சுதந்திரத்தை பெருமையுடன் கொண்டாடும் விதத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரத்தின் பெருமையும் நாட்டு முன்னேற்றத்தின் மேன்மையும் வெளிப்படும் விதத்தில் இக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. காண்பவர் மனத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக கருதும்படி உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சுதந்திர தின விழாவுக்கு 'இந்தியனிசம் 2012' என பெயர் சூட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 13ல் நடந்த இவ்விழாவை காலை 8.30 மணிக்கு தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் சென்னை மேயர்.