விலாஸ்ராவ் மரணம்-குடியரசுத் தலைவர் மாளிகை சுதந்திர தின கொண்டாட்டம் ரத்து
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று பிற்பகலில் சென்னை மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுவதாக இருந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் உள்ளிட்டவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையில் கொடியேற்றும் நிகழ்சசி நடைபெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications