தூத்துக்குடி தனியார் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து- 4 பேர் பலி- 5 பேர் படுகாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் அனல்மின் நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமடிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியை அடுத்த புதூர் பாண்டியபுரத்தில் செயல்பட்டு வருகிறது இந்த் பாரத் மின் நிலையம். இதில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர மாநில தொழிலதிபர்கள் இதன் உரிமையாளர்கள்.
இந்த மின்நிலையத்தில் இன்று பிற்கபல் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ பற்றி மின் உற்பத்தி நிலையம் முழுமைக்கும் பரவியது. நிலக்கரி கிடங்கிலும் தீ பற்றி எரிந்தது. இதில் 4 பேர் கருகி உயிரிழந்தனர். இதுவரை 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் உற்பத்தி நிலையத்தில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications