காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது: 6-8 மணிநேரம் மின்தடை அமல்- கடுப்பில் மக்கள்

தமிழகத்தில் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நெல்லை மண்டலத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் கணிசமான அளவுக்கு மின்சாரம் உற்பத்தியானது. இதனால் அவ்வப்போது மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. இந்த மண்டலங்களில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் சராசரியாக 1,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. ஒரு சில தினங்கள் இந்த அளவு குறையும்போது மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும். அதிகபட்சமாக இந்த காற்று சீசனில் ஒரே நாளில் 1,750 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தியானது. இந்த நிலையில் ஆடி மாதம் முடிய உள்ளதால் தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்து வருகிறது.
கடந்த சில தினங்களாக காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரமும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. நெல்லை மண்டலத்தில் நேற்று முன்தினம் 1,211 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இந்த அளவு நேற்று திடீரென குறைந்தது. நேற்று காலை முதலே காற்று இல்லாததால் காற்றாலைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை மண்டலத்தில் இருந்து 1,050 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக நேற்று மீண்டும் கடுமையான மின்வெட்டு அமலுக்கு வந்தது. நகர் பகுதியில் காலை 3 மணிநேரமும், பகல் 3 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. செங்கோட்டை பகுதியி்ல் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பகல் 12 மணி முதல் 2.30 வரையும், பின்னர் மீண்டும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் மின்தடை ஏற்பட்டது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications