அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பு: பிரதமர் மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் சுதந்திர தின உரையில் கூறியுள்ளதாவது:
தற்போதைய சூழலில் உலக பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையை நாம் கவனத்தி கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் உணவு தானியங்கள் வீணாவது கவலைக்குரிய விஷயம். பருவமழை எதிர்பார்த்ததைவிட குறைவாக இருப்பதால் விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்திய பொருளாதார மேம்பாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நாட்டின் வளர்ச்சிக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு 6.5விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு இந்த விழுக்காடு மேம்படும் என்று நம்பிக்கை கொள்வோம். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாட்டில் போலியோ இல்லாத நிலையை நாம் உருவாக்கியிருக்கிறோம். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் பிரதமர் மன்மோகன்சிங்.
முன்னதாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications