For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்தியானந்தா அடியாட்களால் அருணகிரிநாதர் சிறை வைப்பு: கர்நாடக சாமியார் புகார்

By Mathi
Google Oneindia Tamil News

Nithyanantha
மதுரை: நித்தியானந்தா அடியாட்களால் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிறை வைக்கப்பட்டிருப்பதாக கர்நாடகத்தில் இருந்து வந்துள்ள சாமியார் ரிஷிகுமார் புகார் தெரிவித்துள்ளார்.

அருணகிரிநாதர் அழைப்பின் பேரில் மதுரை ஆதீனம் மடத்துக்கு கர்நாடக சாமியார் ரிஷிகுமார் உள்ளிட்டோர் இன்று மதுரை வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே விடாமல் நித்தியானந்தாவின் அடியாட்கள் தடுத்துள்ளனர். மேலும் அருணகிரிநாதரின் செல்போனை பிடுங்கி தனி அறை ஒன்றில் அடைத்துவிட்டனர்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான கர்நாடகத்து சாமியார் ரிஷிகுமாரும் அவரது ஆதரவாளர்களும் ஆதீனத்து மடத்தின் வாயிலில் அமர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

ஆனாலும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை சந்திக்காமல் கர்நாடகம் திரும்பப மாட்டேன் என்று மதுரையில் ரிஷிகுமார் முகாமிட்டுள்ளார்.

English summary
Karnataka Swamy Rishi Kumar has complaint against Nithyananda devotees in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X