உயர் அதிகாரிகளின் சித்ரவதை- டெல்லியில் செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வீரர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராணுவ உயர் அதிகாரிகளின் சித்திரவதையைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முத்து என்பவர் 2 நாட்களாக தலைநகர் டெல்லியில் உள்ள செல்போன் கோபுர உச்சியில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார். அவரை ராணுவ துணை தளபதி லெப். ஜெனரல் எஸ்.கே.சிங் நேரில் சென்று சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் ரெஜிமெண்ட் பிரிவில் பணியாற்றுபவர் கே.முத்து. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் டெல்லி ரயில் நிலையம் அருகே அஜ்மீர் கேட் பகுதி செல்போன் கோபுர உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டார். தம்மை ராணுவ அமைச்சர் அந்தோணியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமது போராட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கூறிய முத்து, தம்மை 5 முறை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இது எனக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டு ராணுவ வீரர்களும் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர் என்றார் மேலும் தமக்கு 6 மாத கால ஊதிய நிலுவையும் இருப்பதாகவும் முத்து புகார் கூறியுள்ளா. முத்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தும் இடத்துக்கு ராணுவ துணை தளபதி லெப்.ஜெனரல் எஸ்.கே.சிங் நேற்று சென்றார். அவர் முத்துவுடன் 30 நிமிடம் தொலைபேசியில் பேசினார். ஆனால் அவரது வாக்குறுதியை தாம் நம்பவில்லை என்று முத்து கூறிவிட்டார்.

முத்துவுடன் பணியாற்றும் சக வீரர்கள் ஒவ்வொருவராக ஏறிச் சென்று அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் முத்து விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் டெல்லி ரயில் நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+