ஓடும் ரயிலில் தகராறு- தூக்கி வீசப்பட்ட 12 வடகிழக்கு மாநிலத்தவர் - 4 பேர் பலி

வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற வதந்தி எஸ்.எம்.எஸ். தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவரை சொந்த நாட்டுக்குள் அகதியாக ஓட வைத்திருக்கிறது. பெங்களூர் நகரில் இருந்து மட்டும் சுமார் 20ஆயிரம் பேர் வரை வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கின்றனர்.
பெங்களூரைவிட்டு வெளியேறும் வடகிழக்கு மாநிலத்தவருக்காக குவஹாத்திக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று முன் தினம் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்றது. பின்னர் அங்கிருந்து குவஹாத்தி நோக்கி புறப்பட்டது. அப்போது ரயிலில் பயணம் செய்த சிலருக்கும் வடகிழக்கு மாநிலத்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வடகிழக்கு மாநிலத்தவர் 4 பேரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளியிருக்கின்றனர். இந்த மோதலில் மொத்தம் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் வடகிழக்கு மாநிலத்தவரின் ரயில் பயணத்திலும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications