For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கீத்திகாவுடன் இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டார் மாஜி ஹரியானா அமைச்சர்!

Google Oneindia Tamil News

Geetika
சண்டிகர்: ஹரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கந்தா, தனது காதலி கீத்திகா சர்மாவுடன் முறையற்ற, இயற்கைக்குப் புறம்பான உறவில் ஈடுபட்டிருந்தார் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீத்திகா சர்மா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி கோபால் கந்தா. 11 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த கந்தா சமீபத்தில்தான் சரணடைந்தார்.

தற்போது கீத்திகாவின் பிரேதப் பரிசோதனை மற்றும் உடல்கூறியல் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் தூக்கில் தொங்கி கீத்திகா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீத்திகா, முறையற்ற, இயற்கைக்குகப் புறம்பான உறவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தவறான உறவில் தான் ஈடுபட்டதால் விரக்தி அடைந்து கீத்திகா தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 5ம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் கீத்திகா தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம். தற்கொலைக்கு முன்பு கீத்திகா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கோபால் கந்தா மற்றும் அருண் சத்தா ஆகியோர் தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார்.

English summary
With former Haryana Minister Gopal Kanda, main accused in the Geetika Sharma suicide case, surrendering after evading arrest for close to 11 days, the drama with regard to the case seems to be far from over. The autopsy report of the former airhostess Geetika has revealed that she died from hanging. The report also says that Geetika was subjected to unnatural pysical relationship which could also be one of the reasons the ambitious woman chose to end her life.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X