கொலை வழக்கில் சிக்கிய தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது கிரனைட் முறைகேடு புகார்
மதுரை மாவட்டத்தை அடுத்து சட்டவிரோத கிரானைட் குவாரிகள் குறித்த ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தேன்கனிக்கோட்டை அருகே கோட்டை சந்தானப்பள்ளி, நாகமங்கலம் பகுதிகளில் தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கிரனைட் வெட்டி எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில், எம்எல்ஏ ராமச்சந்திரன் அவரது மனைவி விமலா, ராமச்சந்திரனின் சகோதரர் வரதராஜன் மற்றும் கிரனைட் குவாரிகளில் வேலை செய்யும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஏற்கனவே பெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலைவழக்கில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.