இடப் பிரச்சனையில் ஊராட்சி தலைவரின் கையை கடித்த 4 பேர் மீது வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் இடப் பிரச்சனையில் ஊராட்சித் தலைவரை கடித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ளது வடவன்பட்டி. இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவர் ராமச்சந்திரன்(55). இவர் தனது சகோதரர் போஸூக்கு சொந்தமான இடத்தை, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மூலம் அளக்க சென்றார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த பழனிசெல்வம் என்பவர் சிலருடன் சேர்ந்து கொண்டு, அந்த இடத்தை வாங்கியிருப்பதாக கூறி வடவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராமசந்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறில் ஆத்திரமடைந்த பழனிசெல்வம், அவரது தந்தை சிவலிங்கம், தாய் மனோன்மணி, போதும்பொன் ஆகியோர், ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன் கையை கடித்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து வடவன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராமசந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பழனிசெல்வம் உட்பட 4 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+