5 மாணவர்களுடன் உறவு .. ஸ்கூல் டீச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் டெக்சஸ் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார் பிரிட்னி நிகோலா கோலப்ஸ் (28). ஆர்லிங்டான் பகுதியில் வசித்து வந்த பிரிட்னிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் கிறிஸ்டோபர் ராணுவத்தில் பயணியாற்றி வந்தார். கடந்த 2011ம் ஆண்டு வெளியூர் வேலையாக சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பிரிட்னி, பள்ளி மாணவர்களுடன் நெருங்கி பழகினார். இதன் மூலம் இவரது வலையில் விழுந்த 2 மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து உறவு கொண்டார். அதன்பிறகு இந்த தகவல் மேலும் 3 மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரியவந்தது. எனவே அந்த 3 மாணவர்களுடனும், பிரிட் உறவு கொண்டுள்ளார்.
இது குறித்து சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் விசாரித்த போது, அதை மாணவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் 5 மாணவர்களுடன் பிரிட்னி உறவு கொள்ளும் காட்சியை மாணவர் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். இதை கைப்பற்றிய பள்ளி நிர்வாகத்தினர், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 18 வயது கொண்ட 5 மாணவர்களுடன் உடலுறவு கொண்ட ஆங்கில ஆசிரியை பிரிட்னிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இது குறித்து பிரிட்னியின் வலையில் சிக்கிய மாணவர்கள் கூறியதாவது,
ஆசிரியை உடனான உறவு குறித்த ரகசியத்தை வெளியே தெரியாமல் பத்திரமாக பாதுகாத்து வந்தோம். பள்ளி நிர்வாகத்தினர் எங்களை அழைத்து விசாரித்த போது கூட, நாங்கள் மறுப்பு தெரிவித்து ஆசிரியை மாட்டி கொள்ளாமல் பாதுகாக்க முயன்றோம். ஆனால் ஆசிரியை சிக்கி கொண்டார் என்றனர்.












Click it and Unblock the Notifications